பிரதமரை சந்தித்தார் ஜெய்சங்கர்

பிரதமரை சந்தித்தார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை மைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு இந்திய அபிவிருத்தி உதவிகள் மற்றும் ஆளுமை விருத்தி செயற்திட்டங்கள் ஊடாக இலங்கை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென ஜெய்சங்கர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )