அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : மூவர் பலி !

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : மூவர் பலி !

அமெரிக்காவின் ஆர்கான்சஸ் (Arkansas) பகுதியிலுள்ள சிறப்பு அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 10 பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் காயமடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குறைந்தது 234 வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 21 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )