அத்துருகிரிய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

அத்துருகிரிய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

அதுருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே. சுஜீவாவும் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )