ஈரான் ஜனாதிபதியின் உடல் நல்லடக்கம்

ஈரான் ஜனாதிபதியின் உடல் நல்லடக்கம்

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்தெல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில்    நேற்று (23) நடைபெற்றது.

மறைந்த ஈரான் ஜனாதிபதி மற்றும் ஏனையோருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஈரானின் ஜனாதிபதியாக பதவியேற்ற வலுவான கருத்தியல் தலைவரான ஈரான் ஜனாதிபதி ரைஸியின் இறுதிக் கிரியைகள் அவர் பிறந்த புனித நகரமான மஷாத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )