கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேஷியாவுக்கு பயணம் !

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேஷியாவுக்கு பயணம் !

மலேஷிய பிரதி ஜனாதிபதி டட்டுக் ஸ்ரீசரவணனின் அழைப்பையேற்று கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந் தில் தொண்டமான், நேற்று (08) மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மலேசியா பாராளுமன்றத்துக்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மலேஷிய பிரதி ஜனாதிபதியும் மலேஷியாவின் தாபா பாராளுமன்ற உறுப்பினருமான முருகன் சரவணன் (Datuk Seri. MuruganSaravanan) விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்லின மக்கள் வாழும் நாடுகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் ஒன்றாக வாழ்வதற்கு செந்தில் தொண்டமான் வழங்கிய பயிற்சிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )