ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் காயம் !

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் காயம் !

ஹபராதுவ பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைகளுக்காகக் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இரண்டு பேரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 மற்றும் 49 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )