வங்காளதேசத்தில் போராட்டம் ; வன்முறையில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள்

வங்காளதேசத்தில் போராட்டம் ; வன்முறையில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள்

வங்காளதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் உட்்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும“ அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டம் காரணமாக அந்நாடு முழுவதும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )