முச்சக்கர வண்டி சாரதி கொலை : இருவர் கைது !

முச்சக்கர வண்டி சாரதி கொலை : இருவர் கைது !

குருந்துவத்தை – வோர்டு பகுதியில் தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலையினை மேற்கொண்ட பின்னர் முச்சக்கரவண்டியுடன் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் மூவரில் இருவர் திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் நேற்றைய தினம் (26) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கிராண்ட்பாஸ், சமகி மாவத்தை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 35 மற்றும் 48 வயதுடைய கோனவில மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் பிரதான சந்தேகநபரும் அடங்குவதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய கத்தி மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாவது சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )