இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர்சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 58 ஓட்டங்களையும் , ரிஷப் பந்த் 49 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மதீஷ பத்திரன 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பாத்தும் நிஸ்ஸங்க 79 ஓட்டங்களை பெற்றதுடன் குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரியான் பராக் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 03 போட்டிகள் கொண்டி இருபதுக்கு 20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )