ஐ.தே.க, ஐ.ம.ச, பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள் என ஜே.வி.பி மிரட்டல்!

ஐ.தே.க, ஐ.ம.ச, பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள் என ஜே.வி.பி மிரட்டல்!

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள்
என ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரி வித்து, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த வினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜனதா விமுக்தி பெரமுனவின், ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் படையின் இலச்சினை பதிக்கப்பட்டுள்ள சட்டையை அணிந்திருக்கும் இந்த நபர், “நாங்கள் தேசிய மக்கள் படையின் உறுப்பினர்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளைச் சேர்ந்த அனைவரையும் தாக்குவோம்” என பொதுவெளியில் சூளுரைத்துள்ள காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையிலேயே, இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டை இரத்தக் களரியாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்துபவர்கள் தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த குற்றப்புலனாய்வுத்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )