
தேசபந்து தென்னகோனின் இல்லத்திலிருந்து 1009 மது போத்தல்கள் மீட்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் மீட்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர், ”தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களை நாங்கள் கண்டறிய முடியும்” என தெரிவித்துள்ளார்.