
பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க நிரந்தர நீதாய நீதிமன்றதில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதாய மேல் நீதிமன்றத்தில் நயனா செனவிரத்ன ,நளின் ஹேவாவசம் ,லக்மாலி ஹேவாவசம் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்:
பிரகீத் எக்னலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி இரவு கடத்தப்பட்டார்.
இச்சம்பவம் இடம்பெற்று 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவர் உயிரிழந்தமை குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

