
ஓய்வூதிய திருத்தத்தின் முதல் கட்டத்தில் 98% செலுத்தப்பட்டுள்ளது
ஓய்வூதிய திருத்த செயல்முறையின் தற்போதைய முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன, அண்மையில் (18) ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஒரு விசேட ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
ஓய்வூதிய உயர்வின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், திருத்தம் செய்யப்பட வேண்டியவர்களில் 98%-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், 2026 மே மாதமளவில், சுமார் 4,29,000 ஓய்வூதியதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக சுமார் 4,63,000 ஓய்வூதியதாரர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு மாதமும் சுமார் 2,500 புதிய ஓய்வூதியதாரர்கள் இந்த அமைப்பில் இணைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், ஓய்வூதிய திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் ஜூலை முதல் நடைமுறைப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள அதிகாரிகளையும் இதன்போது அமைச்சர் பாராட்டினார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

