லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சீமெந்து சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சாரதி தூங்கியதால் கார் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  சம்பவத்தில் சாரதி காயமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)