காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்று (10) இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான கார்த்திகசு உருத்திரகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோதே காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி அவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)