
ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் கைது
மாத்தறை- கந்தர பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மாத்தறை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே போதைப்பொருட்களுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் இருந்து 160 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 60 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
CATEGORIES Sri Lanka