
யாழில் 20 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது
17ஆம் திகதி திங்கட்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் 20 லீட்டர்கள் கோடாவுடன் 55 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka