CIDயில் ஆஜரானர் இராஜ் வீரரத்ன

CIDயில் ஆஜரானர் இராஜ் வீரரத்ன

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

நேற்று (25) தனது யூடியூப் சேனலில் சுதத்த திலகசிறி தொடர்பில் வெளியிட்ட ஒரு தகவல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

தலதா மாளிகைக்கு பணம் வழங்குமாறு மோசடியான முறையில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வௌியிட்டதாக தெரிவித்த இராஜ், குறித்த காணொளி உலகிலுள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )