
48 மணி நேரத்தில் களனி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம்
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் களனி ஆற்றில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், களனி ஆற்றுப் படுகையின் சில பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் வரை குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சீத்தாவக்க, டொம்பே, பதுக்க, ஹோமகம, பியாகம, கடுவெல, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் சிறு வெள்ள நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வெள்ள அபாயம் காணப்படும் பகுதிகளில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

