
பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்தறை நீதிமன்றம் பிடியாணைபிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் நிலம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

