டெலிகொம் பங்குகளை விற்க முயலும் அரசாங்கத்தின் நடவடிக்கை தவறானது !

டெலிகொம் பங்குகளை விற்க முயலும் அரசாங்கத்தின் நடவடிக்கை தவறானது !

தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி தவறானது என்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சர்வஜன வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பில் தொலைத்தொடர்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை டெலிகொம் நிறுவன பொறியியலாளர்கள் சங்கத்தின் குழுவொன்று, திலித் ஜயவீர உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்தது.

இதன்போது, ஜனாதிபதித் தேர்தலின் போது ரெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க தலையிடுமாறு கோரப்பட்டது.

இது தொடர்பான கடிதம் ஒன்றையும் திலித் ஜயவீரவிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )