சிறிகொத்தவில் நாளை ஐ.தே.கவின் விசேட மாநாடு !

சிறிகொத்தவில் நாளை ஐ.தே.கவின் விசேட மாநாடு !

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு அக் கட்சித் தலைமையகமான
சிறிகொத்தவில் நாளை (25) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான யோசனைக்கும் இந்த விசேட மாநாட்டில் அங்கீகாரம்
வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )