ஜனாதிபதி தேர்தலையடுத்து பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலையடுத்து பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பட்டாசு உற்பத்தி அதிகரிப்பதற்கு தேர்தல் காலங்களே காரணமென்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சில தேர்தல்கள் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு பொதுவாக ஆகஸ்ட் மாதம் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.

எனினும், தேர்தல்களை முன்னிட்டு இம்மடுறை முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )