“ரணில் தோற்றால் மீண்டும் இரு ஆண்டுகளில் தேர்தல்”

“ரணில் தோற்றால் மீண்டும் இரு ஆண்டுகளில் தேர்தல்”

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில் நாடு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக
நேரிடும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அல்லது அநுரகுமார திஸநாயக்க வெற்றி பெற்றால், இந்த நிலை ஏற்படும். அத்துடன், பொருளாதாரத்தை கையாள்வது குறித்து அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )