வசந்தவிடம்  500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரினார் மனுஷ !

வசந்தவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரினார் மனுஷ !

வெளிநாட்டு வேலைகளுக ;கு தொழிலாளர்களை அனுப்ப பணம் பெற்றதாக ஆதாரமற்ற பொய் அறிக்கைகளை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக கையொப்பமிடுவதற்கு மனுஷ நாணயக்கார பணம் பெற்றுக்கொள்வதாக வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்துக்கள், முற்றிலும் பொய்யானது என அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சராக மனுஷ நாணயக்கார பொறுப்பில் இருந்த போது அதிகளவானோர் வெளி
நாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவிடம் 500 மில்லியன்
ரூபாய் நட்டஈடு கோரப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களுக்குள் நட்டஈடு தொகையை
வழங்காவிடின் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )