ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிப்பது எப்படி ?

ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிப்பது எப்படி ?

2‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் திருப்தியடையக்கூடிய நிலையில் இருந்தாலும், தேர்தல்களில் சரியாக – முறையாக வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பில் பல விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அறிந்துகொள்வோம்.

நீங்கள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்பினால், அவரது சின்னத்துக்கு முன்னால் என ‘X’ புள்ளடி இடலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் 1 என குறிப்பிடலாம். அது செல்லுபடியான வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

இருவருக்கு வாக்களிக்க விரும்பினால், வாக்குச்சீட்டில்அவர்களது சின்னத்திற்கு முன்னாள் 1, 2 எனக் குறிப்பிடலாம்.

ஒருவருக்கு புள்ளடி இட்டுவிட்டு மற்றையவருக்கு 2 என போட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்க.

2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால்,
நீங்கள் முதலில் விரும்பும் வேட்பாளருக்கு முன்னால் அதாவது குறித்தொகுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 எனவும், 2ஆவது விரும்பும் வேட்பாளருக்கு முன்னால் குறித்தொகுக்கப்பட்ட இடத்தில் 2 எனவும், 3 ஆவது விரும்பும் வேட்பாளருக்கு முன்னால் 3 எனவும் பதிவிடலாம்.

முதல் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு முன்னால் X என அடையாளம் இட்டுவிட்டு, ஏனைய இருவருக்கு 2,3 என பதிவிட்டிருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.

அதேபோல மூவருக்கும் Xஎன அடையாளமிட்டாலும் அந்த வாக்கு செல்லுபடியற்ற வாக்காகவே கருதப்படும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )