![மட்டக்களப்பு கடலில் நீராட சென்ற மாணவன் மாயம் மட்டக்களப்பு கடலில் நீராட சென்ற மாணவன் மாயம்](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/1739064314-image_d8dd82addf.jpg)
மட்டக்களப்பு கடலில் நீராட சென்ற மாணவன் மாயம்
மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.