மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி !

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி !

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 03 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னேறியுள்ளது.

தம்புள்ளையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் 141 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து (Chamari Athapaththu ) அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்றார்.

இதற்கமைய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை 03 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )