பொதுத் தேர்தலில் ராஜபக்ச சகோதரர்கள் போட்டியிட போவதில்லை

பொதுத் தேர்தலில் ராஜபக்ச சகோதரர்கள் போட்டியிட போவதில்லை

ராஜபக்ச குடும்பத்தினர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தகவல் வெளிவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)