தீபாவளியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் !

தீபாவளியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் !

ஊவா மாகாண சபையின் கீழுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் (31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளமையினால், மறுநாள் (01) மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)