
இப்தார் இராபோசன விருந்துபசாரத்தில் பற்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் (04) மாலை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

