
நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ; GMOA அறிவிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (12) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நேற்று (11) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.