தற்காலிகமாக போரை நிறுத்த புதின் ஒப்புதல்

தற்காலிகமாக போரை நிறுத்த புதின் ஒப்புதல்

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரேனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரேனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் இராணுவ உதவி வழங்கியன.

இதனால் உக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷ்யா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரேன் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரேன் -ரஷ்யா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:-

உக்ரேன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார். அதில் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.

உக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரேன் ஆயுதங்களை குவிக்க கூடாது.ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரேன் இராணுவ கைதிகளை விடுவிக்கப்படும்.

உக்ரேன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்யா ஜனாதிபதி புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)