
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அணையின் பொறுப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, பொல்கொல்ல அணையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கம் வரையிலான மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

