
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி
சூடானில் கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
CATEGORIES World News

