
கந்தானையில் நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபர்
கந்தானை நகரில் நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபர் குறித்த காட்சி அங்கு பயணித்த வாகனம் ஒன்றின் முன்பக்க கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த காணொலியில் நபரொருவர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக் கொண்டு சைக்கிளை செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
பகல் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பிரதேச மக்களின் விமர்சனங்களுக்குள்ளான நிலையில் போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது .
குறித்த நபரை அடையாளம் காணவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும் பொலிஸார் தற்போது காட்சிகளை பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

