
துளசி மாலையும் ஐயப்பனும்
ஐயப்பன் அவதரித்தபோது, அவரது தாயான திருமாலும், தந்தையான சிவபெருமானும் பம்பை நதிக்கரையில் விட்டுச் சென்றனர். அப்போது குளிர்காற்றில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, துளசி மாலையில், மணியைக் கோர்த்து கழுத்தில் போட்டனர்.
இதுதவிர மகாவிஷ்ணுக்கு பிடித்தது துளசி. இதனால்தான் ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், துளசி மாலையில், ஐயப்பனின் உருவம் பொறித்த டாலரை அணிகின்றனர். கார்த்திகை மாதம், மழைக்காலம். துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது என்பதால், துளசிமாலையை அணிவதாக அறிவியல் ரீதியான விளக்கமும் உள்ளது.
CATEGORIES Sri Lanka

