தெவுந்தர சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் மீன் வியாபாரி மீது துப்பாக்கிச் சூடுமாத்தறை வைத்தியசாலையில் அனுமதி

தெவுந்தர சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் மீன் வியாபாரி மீது துப்பாக்கிச் சூடுமாத்தறை வைத்தியசாலையில் அனுமதி

தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் சாம்பல் நிற கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘டிலைட்’ என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.

இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன், சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )