
புதன்கிழமைகள் பொது விடுமுறை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு சில நிறுவனங்களுக்கு விதிவிலக்கு
சுகாதார அமைச்சின் சில குறிப்பிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நடைமுறை இந்த வாரம் முதல் மறு அறிவித்தல் வரை அமலில் இருக்கும்.
ஒவ்வொரு புதன்கிழமையும் பின்வரும் அலுவலகங்களில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்:
காசல் வீதியில் அமைந்துள்ள புதிய அமைச்சுக் கட்டிடத்தின் அனைத்துப் பிரிவுகளும்.
நாரஹேன்பிட்டியில் உள்ள மலேரியா ஒழிப்புப் பிரிவு கட்டிடத்தின் அனைத்துப் பிரிவுகளும்.
தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் (National Cancer Control Programme).
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் (Health Promotion Bureau).
நேரடியாக அலுவலகம் வர வேண்டிய மற்றும் அத்தியாவசிய சேவைகள்:
…………………………………………………..
போக்குவரத்துப் பிரிவு: போக்குவரத்து தொடர்பான அத்தியாவசியப் பணிகள் ‘சுவசிரிபாய’ (Suwasiripaya) கட்டிடத்தில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அதிகாரிகள், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதன்கிழமைகளில் ‘சுவசிரிபாய’ வளாகத்தில் பணியாற்ற வேண்டும்.
மேற்கண்ட நிறுவனங்களில் உள்ள அத்தியாவசியப் பணிகளைத் தகுந்த மாற்று வழிகளைப் பின்பற்றித் தடையின்றி முன்னெடுக்க வேண்டும்.
சுகாதார அமைச்சின் ஏனைய பிரிவுகள்/அலகுகள் புதன்கிழமைகளில் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு இயங்குவதற்கு அவதானம் செலுத்த வேண்டும்.
சுகாதார சேவைகளைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் பேணுவதை உறுதி செய்யுமாறு அனைத்து அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


