
மதுரோ இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்
அமெரிக்கக் காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று (26) நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மதுரோ நீதிமன்றத்தில் ஆஜராவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் நடத்திய சோதனையின்போது மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, அவர்கள் தற்போது புரூக்ளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயங்கரவாதச் சதி, இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருத்தல் உள்ளிட்ட நான்கு கடுமையான குற்றச்சாட்டுகள் மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அவர் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

