
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் அதிகாலை நேரத்தில் சில இடங்களில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது, சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசவும், மின்னல் தாக்குதலால் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சூரியனின் தோற்ற வடதிசை நகர்வின்படி, ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே சூரியன் இருக்கும்.
அதன்படி, (08) நண்பகல் 12:12 மணிக்கு நீர்கொழும்பு, வரக்கபொல, அரநாயக்க, கம்போல, பிபிலே, இங்கினியகல மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும்.

