
ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்த உதய கம்மன்பிலவின் கருத்து -விடுக்கப்பட்ட பொலிஸ் அழைப்பாணை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் சனிக்கிழமை (மே 09) குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அவரது மரணம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

