
நீர்க்கட்டணம் அதிகரிப்பு இல்லை
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் நீர்விநியோக கட்டணங்களை அதிகரிக்காமல் தற்போதைய கட்டணங்களையே தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிலவும் பொருளாதார சூழ்நிலையும், அதன் தாக்கம் பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் சுமையையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், தற்போதைய நீர்க்கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும் எனவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

