
ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன் தொண்டமான்
இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார்.
கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார்.
மக்கள் மதியம் வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.