பேருந்து கவிழ்ந்து விபத்து ; 12 பேர் பலி

பேருந்து கவிழ்ந்து விபத்து ; 12 பேர் பலி

தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜோகன்னஸ்பர்க் கிழக்கே உள்ள டவுன்ஷிப் அல்லது கேட்லெஹாங்கிலிருந்து மக்களை ஏற்றிச் சென்றது. அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அவசர சேவை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டாம்போ சர்வதேச விமானநிலையம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 9 ஆண்களும், 3 பெண்களும் இறந்தனர். இன்னும் 2 உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)