கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகையை மீட்ட சூடான் இராணுவம்

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகையை மீட்ட சூடான் இராணுவம்

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை இராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில்  உள்ள ஜனாதிபதி  மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் இராணுவம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (21) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி  மாளிகையை சூடான் இராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )