பாராளுமன்ற தேர்தலை வழிநடத்துவதற்கு பசில் நாடு திரும்புவார்

பாராளுமன்ற தேர்தலை வழிநடத்துவதற்கு பசில் நாடு திரும்புவார்

வெளிநாடு சென்றுள்ள தமது கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, பாராளுமன்றத் தேர்தலை வழிநடத்துவதற்காக வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறினார்.

“ மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதற்கு முன்கூட்டியே பசில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். எனினும், கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டதையடுத்து அவரின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது உழைத்தார். எமக்கு அறிவித்துவிட்டே வெளிநாடு சென்றுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலை வழிநடத்துவதற்கு வெகுவிரைவிலேயே அவர் நாடு திரும்புவார்.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )