போலி தகவல்களை நம்பி ஏமாறாதீர்கள்

போலி தகவல்களை நம்பி ஏமாறாதீர்கள்

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிப்புகள் விடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். ஏ. எம். எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போலி தகவல் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு பரப்படும் லிங்குகளுக்குள் பிரவேசிக்கவோ, அவற்றை பகிரவோ வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )