6 மீனவர்களுக்கு விளக்கமறியல்

6 மீனவர்களுக்கு விளக்கமறியல்

நாட்டின் தென் கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவானிடம் நேற்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காலிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி படகில் 131 கிலோ கிராம் ஹெரோயினுடன் குறித்த ஆறு சந்தேகநபர்களும் பயணித்த போது கடந்த 14ஆம் திகதி கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். இதன்போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி பல மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )