காசாவில் தொடரும் மோதல்: மத்தியில் இஸ்ரேலிய படைமனிதாபிமான வலயத்தில் தாக்குதல்: 09 பேர் பலி !

காசாவில் தொடரும் மோதல்: மத்தியில் இஸ்ரேலிய படைமனிதாபிமான வலயத்தில் தாக்குதல்: 09 பேர் பலி !

காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நேற்று (19) இடம்பெற்ற மோதலில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ‘மனிதாபிமான வலயம்’ ஒன்றாக அறிவித்திருந்த ரபாவின் அல்மவாசி பகுதியில் உள்ள தற்காலிக கூடாரங்கள் மீது நடத்திய தாக்குதலில் 09 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (19) அதிகாலையில் இடம்பெற்ற இந்தத் தாக்கு தலை அடுத்து அந்தக் கூடாரங்கள் தீப்பற்றி எரிந்ததாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இதில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே கொல்லப்பட்டதாக அந்த முகாமில் இருந்த பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட பகுதியிலே இஸ்ரேல் எம் மீது செல் குண்டுகளை வீசியது.

இங்கு சிறுவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள்’ என்று குறித்த பெண் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாம் மீது இஸ்ரேலியப் படை குண்டு வீசியதாக வபா தெரிவித்துள்ளது.

காசா நகரின் வீடு ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும்
சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டு 71 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மீட்பாளர்களால் அடைய முடியாத பகுதிகளில் பாதிக்கப்பட்ட கணிசமானவர்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,396 ஆக அதிகரித்திருப்பதோடு 85,523 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ரபாவின் முக்கிய வீதி ஒன்றில் தினசரி மனிதாபிமான சண்டை நிறுத்தம் ஒன்றை இஸ்ரேல் இராணுவ அறிவித்தபோதும், இந்த சண்டை நிறுத்தம் மக்களுக்குத் தேவையான உதவிகள் அடையும் வகையில் அமைய வில்லை என்று ஐ.நா.தெரிவித்துள்ளது.

மேலும், காசாவில் உணவு, நீர், மருந்துக்கு தட்டுப்பாட்டு நிலவிவரும் சூழலில் அங்கு பஞ்சம் ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளதாக ஐ.நா தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )